பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலை பலூச் விடுதலை இராணுவம் (Baloch Liberation Army - BLA) என்ற கிளர்ச்சி அமைப்பு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அதில் 120-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பணயக்கைதிகளை கொல்லப்போவதாக BLA எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.