உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும் வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் தமது வேட்பு மனுக்களை உரிய காலத்தின் கையளிக்க வேண்டும் என்றும்
இதன்போது வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் எனவும் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள் மற்றும் 9 பிரதேச சபைகளுக்கான தேர்தல் முன்னெடுக்கப்பட உள்ளதுடன் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் தேர்தல் அலுவலகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வோர் இறுதி வரை காத்திடாமல் தங்களது வேட்பு மனுக்களை நேர காலத்துடன் தாக்கல் செய்யுமாறு மாவட்டத்தில் அமைதியான தேர்தலை முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டி நிற்பதாகவும் இன்று மாவட்ட தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான அரசாங்க அதிபர் திருமதி. ஜேஜே முரளிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.