கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

வரதன்




 கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60  வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது- மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான்

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் தேர்தல் சட்டங்களை பின்பற்றி  கட்டுப்பனம் மற்றும் வேட்பு மனு தாக்கல் என்பவற்றை உரிய நேரத்திற்கு முன்னெடுப்பதன் மூலம்  தேர்தல் திணைக்களத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் அமைதியான தேர்தலை நடத்தி முடிக்க சகல தரப்புக் களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் தேர்தல் சில வீணங்கள்  உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என

 நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்ற  பெண்களுக்கான உள்ளுராட்சி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்