தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

 


யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.