முன்னாள் 04 ஜனாதிபதிகள் ஒன்று கூடுவது ஏன் ? கொழும்பு அரசியலில் பரபரப்பு .

 

 


முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொழும்பில் நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. 

இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரி குறித்தும் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துமே இதன்போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.