டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்

 


நாட்டில் இந்த வருடத்தின்  இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதுவரை 14,678 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.