இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka) கடந்த 05.04.2025 அன்று கொழும்பில் நடைபெற்ற World International Awards 2025 நிகழ்வில் "Fastest Growing Educational Institute of the Year - Platinum Award" Educational Institute/Services" என்ற சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தலைமையமாகக் கொண்டு இயங்கிவரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகம் கல்வித் துறையில் மாபெரும் சாதனையை ஏற்படுத்தியதற்காகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதை நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் மற்றும் அவரது குழுவினரும் இதன்போது கலந்து கொண்டு பெற்றுக் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கற்கை நிறுவகமானது தற்போது Diploma மற்றும் Degre பட்டப்படிப்புகளை UGC அங்கீகாரம் பெற்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, நடாத்திவருவதுடன் மிகவிரைவில் Master's Degree கற்கை நெறியையும் வழங்கவுள்ளதாகவும், இந்த விருதானது எங்களது கல்விப் பணிக்கான சர்வதேச அங்கீகாரம் என இதன்போது இந்நிறுவனத்தின் தலைவர் த.துஷ்யந்தன் தெரிவித்தார்.
(வ.சக்திவேல்)