
FREELANCER
கிழக்கின் மண்டூர் கிராமத்தை பூவீகமாக கொண்ட மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்கள் முப்பத்தி ஏழு வருட கல்விசேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆரம்ப கல்வியை மண்டூர் இராம கிருஷ்ண வித்தியாலயத்திலும் , இடை நிலைக்கல்வியை மட் /வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் மட் /சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றார் .
மண்டூர் மகா வித்தியாலயத்தில் 1980.இல் விஞ்ஞான ஆசிரியராக முதல் நியமனம் பெற்று தனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தார்
2008. இல் மட் / குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்தார், அதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சேவை தரம் -II இல் நியமனம் பெற்று மட் /அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் பிரதி அதிபராக பொறுப்பேற்று 2012. இல் அதே பாடசாலையில் பதவி உயர்வு பெற்றார் .
2015.ம் ஆண்டு SLPS தரம் I. அதிபராக பதவி உயர்த்தப்பட்டார் .
2019 ம் ஆண்டு முதல் கல்லடி உப்போடை மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் கல்லூரி
அதிபராக நியமனம் பெற்று தொடர்ச்சியாக 06. வருடங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி இன்றைய தினம் 2025.04.25 முப்பத்தி ஏழு வருட கல்விசேவை பூர்த்தி செய்து ஓய்வு பெற்று செல்கிறார் . அதிபர் அவர்கள் 1C. தரத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கான "குரு பிரதீபா" தேசிய விருதை 03. ஆண்டுகள் பெற்றுக்கொண்டது குறிப்பிட்ட தக்கதாகும்
பாடசாலை கலாசார மண்டபத்தில் ஓவ்வு பெற்ற அதிபரின் சேவையினை பாராட்டி மாணவர்களாலும் , ஆசிரியர்களாலும் மற்றும் கல்வி சமூகத்தாலும் கௌரவிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது . இதன் போது பொன்னாடை போர்த்தி , கவிதைகள் வாசிக்கப்பட்டு , நினைவுப்பரிசுளும் வழங்கி வைக்கப்பட்டன .