கிழக்கு
மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய
நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André
Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம் திகதி திருகோணமலை ஆளுநர்
அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதில்,
கிழக்கு மாகாணத்தில் பிரச்சினை தீர்க்கும் செயல்முறை மிகவும்
திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து
விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார்.
மேலும்,
இலங்கையின் மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாகத்தால் தான் ஈர்க்கப்பட்டதாகக்
கூறினார்.
இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)